சேலம் அய்யந்திருமாளிகை பகுதியில் அமைந்துள்ள நேசக்கரங்கள் ஆதரவு ஏற்கும் இல்லத்தில் 75 வது இந்திய சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
இல்ல தலைவர் திரு.செல்லதுரை அவர்கள் தலைமை தாங்கினார். இல்ல நிறுவன செயலாளர் திரு பெரியசாமி அவர்கள் தேசிய கொடியேற்றி நிகழ்ச்சியை துவைக்கி வைத்தார். அனைவரையும் இல்ல கண்காணிப்பாளர் சண்முகபிரியா வரவேற்று பேசினார். விழாவில் நேசக்கரங்கள் இல்ல குழந்தைகள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேலும் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டு சான்று விழாவில் வழங்கப்பட்டது. முன்னதாக தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி எடுக்கப்பட்டது. விழாவில் ஆசிரியர்கள் ஸ்ரீனிவாசன், சாந்தகுமாரி, இல்ல ஆற்றுபடுத்துநர் தாமரை, வார்டன் கோமதி, மதன், சங்கர், சண்முகம் மற்றும் அணைத்து இல்ல பணியாளர்களும் கலந்து கொண்டார்கள்.
இல்ல மேலாளர் துரைசாமி நிகழச்சிகளை தொகுத்து வழங்கி, நன்றியுரையாற்றினார். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.
விழா ஏற்பாடுகளை நேசக்கரங்கள் அறங்காவலர் குழுவினர் செய்திருந்தார்கள்.